×

தகராறில் கீழே விழுந்த முதியவர் பலி

இளையான்குடி, ஜூன் 15: இளையான்குடி அருகே உலகமணியேந்தலைச் சேர்ந்தவர்கள் பிளவேந்திரன்(62), சூசை. இருவரும் அண்ணன்,தம்பிகள். நேற்று மாலை அரசு புறம்போக்கு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு, சூசை மகள் அருள் முத்து, மருமகன் பிரான்சிஸ் மற்றும் மகன் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் கம்பி ஊன்றி வைத்துள்ளனர்.

ஆனால் பிளவேந்திரன் மற்றும் அவரது மகன்கள் தாஸ், சந்தியாகு ஆகியோர் அந்த இடத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். அதனால் இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கீழே தள்ளி விட்டதில் பிளவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகராறில் கீழே விழுந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Plavendran ,Ulagamanienthal ,Ilayayankudi, Soosai ,Dinakaran ,
× RELATED 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்